• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரகசிய வாக்கெடுப்பு – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை

February 17, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும்போது, பேரவை உறுப்பினர்களிடம் ரகசியமான முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஓ.பி.எஸ். ஆதரவான முன்னாள் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர்.

முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், எம்.எல்.ஏ-க்கள் “மாஃபா” பாண்டியராஜன், செம்மலை ஆகியோர் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை வெள்ளிக்கிழமை காலையில் சந்தித்தனர்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சனிக்கிழமை சட்டப் பேரவையில் நடைபெறும்போது ரகசிய நம்பிக்கை வாக்கெடுப்பு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க