• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யார் அந்த நபர் ? சங்கர் மகாதேவனை வியக்க வைத்த சாமானிய பாடகர் !

June 30, 2018 தண்டோரா குழு

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன். இப்படத்தில் இடம்பெற்ற ’உனைக் காணாத நாள்’ என தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சங்கர் மகாதேவன் பாடியிருந்த இப்பாடலை முகம் தெரியாத சாதாரண நபர் ஒருவர் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு அதே குரலில் மிகத்திறமையாக பாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த பாடகர் சங்கர் மகாதேவன் அந்த நபரைப் பற்றிய தகவல்களை தனக்குத் தருமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், இவரை நான் எப்படி கண்டுபிடிப்பது? இவருடன் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பமாக இருக்கிறது. இவரைக் கண்டறிய எனக்கு உதவி தேவை எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஒருவர் அப்பாடலை பாடிய நபரின் தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க