• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

September 24, 2021 தண்டோரா குழு

கோவையில் கடந்த சில மாதங்களாக சாலையோரங்களிலும், வீடுகளுக்கு வெளியேவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன.

இதையடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், மாநகர் பகுதியில் அவர்கள் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் செல்வபுரத்தை சேர்ந்த அரவிந்த் என்கிற அசாருதீன் (28), பட்டிணத்த்தை சேர்ந்த கார்த்திக் என்கிற ரஞ்சித்குமார் (26), குனியமுத்தூரை சேர்ந்த முகமது சாதிக் (24) என்பது தெரியவந்தது.

இவர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 12 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.

மேலும் படிக்க