• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடி தலைமையில் கமலுக்கு பாராட்டு விழா ?

April 24, 2017 தண்டோரா குழு

பிரதமர் மோடி தலைமையில் கமலுக்கு பாராட்டு விழா நடத்த வெங்கைய்யா நாயுடுவிடம் நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றவுடன் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.தியேட்டர்களில் படங்களை கேமரா வைத்து எடுப்பவர்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் தரப்படும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில்,இணையதளங்களில் பைரசி பரவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர்சென்னையில் நடந்த ஒரு விழாவில் மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடுவை சந்தித்து அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அப்போது, வெங்கைய்யா நாயுடுவிடம் இன்னொரு கோரிக்கையையும் விஷால் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பிரான்ஸ் நாட்டின் சார்பில் கமலுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கமலை பாராட்டும் வகையில் இந்திய அளவில் ஒரு பிரமாண்ட விழா ஒன்றை நடத்த வேண்டும். அந்த நிகழ்ச்சி பிரதமர் மோடியின் தலைமையில் நடக்க வேண்டும் என்று அமைச்சரிடம் விஷால் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் படிக்க