• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கோவை மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் ரத்த தானம்

September 21, 2019 தண்டோரா குழு

பாரத பிரதமரின் 69வது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் சசிகுமாரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் பிறந்தநாள் விழா கோவை மாவட்டத்தில் பாஜக சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கோவை அரசு மருத்துவமனையில் பிரதமர் மோடியின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டும், சசிகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டியும் மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இளைஞரணி மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் முன்னிலையில் தொண்டர்கள் ரத்த தானம் வழங்கினார்கள், இதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக இளைஞரணி சார்பில் ரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுசெயலாளர் ரமேஷ்குமார், மதன்மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவுண்டம்பாளைய மண்டல தலைவர் அசோக்குமார் ஏற்பாடு செய்தார்.

மேலும் படிக்க