• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மொபைல் எண் இலக்கம் 13க்கு மாறுகிறதா?

February 21, 2018 தண்டோரா குழு

மொபைல் எண்களை 13 இலக்கமாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று தொலைத்தொடர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத் துறை கடந்த ஜனவரியில் அனுப்பிய சுற்றறிக்கையில்,  இனி புதிதாக அளிக்கப்படும் அனைத்து மொபைல் எண்களும் (M2M) 10 இலக்கங்களுக்கு பதிலாக 13 இலக்கமாகமாற்றப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னெடுப்பை நடவடிக்கையை தொலைதொடர்புத் துறை எடுத்துள்ளது. இதனால், இனி நாம் பயன்படுத்தும் 10 இலக்க மொபைல் எண்கள் இனி 13 இலக்க எண்ணாக மாறுமா என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என தொலைத்தொடர்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. தொழிற்துறை பயன்பாடுகளுக்கான Smart Metering, Asset Tracking Solutions, Equipment Monitoring Solutions போன்ற சிம் அடிப்படையிலான எம்2எம் சாதனங்களுக்கு மட்டுமே 13 இலக்க எண் வழங்கப்பட உள்ளதாகவும், வழக்கமான மொபைல் பயன்பாடுகளுக்கு 10 இலக்க எண்களே தொடரும் என தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

மேலும் படிக்க