• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது – தமிழக அரசு அறிவிப்பு

April 20, 2020 தண்டோரா குழு

மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஏப்ரல் 20- க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கையினை செயல்படுத்துவது குறித்தும் இன்று முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற மே 3ம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வும் கிடையாது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும்
நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க