• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை – விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்

May 20, 2020 தண்டோரா குழு

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு அமலில் உள்ளது. இதனால், விமான சேவை முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“நிலைமைக்கேற்ப மே 25, திங்கள்கிழமை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும். தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பயணிகளை அழைத்துச் செல்வதற்கான நடைமுறைகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் தனியாக வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க