• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

May 31, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 16வது மற்றும் 17வது வார்டு பகுதிகளான வடவள்ளி, முல்லை நகர் ஆகிய பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் ஆகியவற்றை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணிகளும் நடைபெற்றது. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மொத்த காய்கறி கொள்முதல் மார்க்கெட்டில், கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் அந்தந்த பகுதிகளுக்கு காய்கறிகள் பிரித்து அனுப்பப்படும் பணிகள் நடைபெற்று வருவதை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கே.வீரராகவ ராவ், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி துணை கமிஷனர்மதுராந்தகி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும் படிக்க