கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே ஏப்ரல் 15ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடம் பயணம் செய்து வருகின்றனர்.ஊட்டியில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.
இதனிடையே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை 11 ட்ரிப் சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஏப்.16 முதல் ஜூன் 25ம் தேதி வரை 11 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த சிறப்பு மலை ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அதேபோல், ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் மலை ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்