• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த கமல்

October 21, 2017 தண்டோரா குழு

மெர்சல் படத்துக்கு பஜாகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமல் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி தீபாவளியன்று வெளியானது. இதில் ஜி.எஸ்.டி, பண மதிப்பு இழப்பு மற்றும் மத்திய அரசை குறித்து சில காட்சிகள் வசனத்துடன் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த காட்சிகளை நீக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு ஆதரவாக டுவிட் செய்துள்ளார். அதில்,‘‘மெர்சல் படம் தணிக்கை சான்றிதழை ஏற்கனவே பெற்றுள்ளது.எனவே அதனை மறுதணிக்கை செய்ய வேண்டாம். விமர்சனங்களை தர்க்கரீதியான முறையில் எதிர்கொண்டு கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.மாறாக,விமர்சிப்போரை மவுனமாக்கக் கூடாது. கருத்துகளை வெளிப்படையாக பேசும்போது தான் இந்தியா மிளிரும்’’

இவ்வாறு டிவிட்டரில் கமல் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க