• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெர்சல் பட விளம்பரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

September 22, 2017 தண்டோரா குழு

நடிகர் விஜய் நடிக்கும் மெர்சல் படத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி உலக அளவில் சாதனை படைத்தது. இதற்கிடையில், தயாரிப்பளர் ராஜேந்திரன் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 2014ம் ஆண்டே மெர்சலாயிட்டேன் என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். இப்படத்தை புதுமுக இயக்குனர் புதுமுக நடிகரை வைத்து இயக்கி வருகிறார். மேலும் தலைப்பை புதுப்பிக்கும் பணியையும் செய்து வருகிறேன். ஆகையால் விஜயின் மெர்சல் படத்தை விளம்பரம் செய்வது தவறானது எனக் குறிப்பிடிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. எனினும் படக்குழு சார்பில் அதிக அளவு பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தை விளம்பரப்படுத்த தடை விதிக்கக்கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி அக்டோபர் 3ம் தேதி வரை படத்தை விளம்பரபடுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும், அன்றைய தினத்திற்கே வழக்கை ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்க