October 19, 2017
தண்டோரா குழு
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படம் பல்வேறு சர்ச்சைக்கு பிறகு நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை திருவொற்றியூரில் தமிழக பா.ஜ.,க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நில வேம்பு குடிநீர் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அரசியலுக்கு வருவதற்காக நடிகர் விஜய் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான காட்சிகள் இடம்பிடித்துள்ளன. அவற்றை நீக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என கூறினார்.