• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெர்சல் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க கோருவது கருத்துரிமைக்கு எதிரானது – தணிக்கை வாரியம் விளக்கம்

October 20, 2017 தண்டோரா குழு

மெர்சல் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க கோருவது கருத்துரிமைக்கு எதிரானது என மண்டல தணிக்கைக்குழு அதிகாரி மதியழகன் கூறியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்தது வருகிறது. இதற்கிடையில், மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டைவை தொடர்பான காட்சிகளுக்கு தமிழக பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்து அந்த காட்சியை நீக்கவேண்டும் என கூறியுள்ளார். அதைபோல் மெர்சல் படத்திற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.

இந்நிலையில், மண்டல தணிக்கைக்குழு அதிகாரி மதியழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது,விஜயின் மெர்சல் திரைப்பட காட்சிகளில் யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை. காட்சிகளை நீக்கவேண்டும் எனில் தணிக்கைகுழுவிடம் மீண்டும் அனுமதி பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,கருத்துரிமை அடிப்படையிலேயே வசங்கங்கள் உள்ளன. ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை எனவும் மெர்சல் படத்திற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என கூறுவது சரியல்ல எனவும் கூறினார்.

மேலும் படிக்க