• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க கோருவது கருத்துரிமைக்கு எதிரானது – தணிக்கை வாரியம் விளக்கம்

October 20, 2017 தண்டோரா குழு

மெர்சல் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க கோருவது கருத்துரிமைக்கு எதிரானது என மண்டல தணிக்கைக்குழு அதிகாரி மதியழகன் கூறியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்தது வருகிறது. இதற்கிடையில், மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டைவை தொடர்பான காட்சிகளுக்கு தமிழக பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்து அந்த காட்சியை நீக்கவேண்டும் என கூறியுள்ளார். அதைபோல் மெர்சல் படத்திற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.

இந்நிலையில், மண்டல தணிக்கைக்குழு அதிகாரி மதியழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது,விஜயின் மெர்சல் திரைப்பட காட்சிகளில் யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை. காட்சிகளை நீக்கவேண்டும் எனில் தணிக்கைகுழுவிடம் மீண்டும் அனுமதி பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,கருத்துரிமை அடிப்படையிலேயே வசங்கங்கள் உள்ளன. ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை எனவும் மெர்சல் படத்திற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என கூறுவது சரியல்ல எனவும் கூறினார்.

மேலும் படிக்க