• Download mobile app
01 Jul 2025, TuesdayEdition - 3429
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

”மெர்சல் சர்ச்சை மன வேதனையை தருகிறது…” – மெர்சல் பட தயாரிப்பாளர் முரளி

October 21, 2017 தண்டோரா குழு

மெர்சல் சர்ச்சை மனவேதனை தருகிறது என அப்படத்தின் தயாரிப்பளார் முரளி தெரிவித்துள்ளார்.

மெர்சல் பட சர்ச்சை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மெர்சல் படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்கள் அனைவர்க்கும் நன்றி. மெர்சல் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் எழுந்தன. அதை சரிசெய்து தீபாவளிக்கு படத்தை வெளியிட்டோம். ஆனால், படம் வெளியான சில தினங்களில் மீண்டும் பல சர்ச்சைகளுக்கு மெர்சல் உள்ளானது எங்களை மிகுந்த மனவேதனை அடைய செய்கிறது.

சாமானிய மக்களுக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே மெர்சல் படத்தின் கரு. யாரையும் புண்படுத்தும் நோக்கில் நாங்கள் படம் தயாரிக்கவில்லை. பாஜகவினர் பார்வையில் அவர்களது எதிர்ப்பு நியாயமாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டவர்களை சந்தித்தோம். சர்ச்சைகள் குறித்த பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து படைப்பின் நோக்கத்தையும் விளக்கினோம். நேரில் சந்திக்கும் எங்கள் முடிவை பாஜகவினர் பாராட்டினார்கள்.நாங்கள் அளித்த விளக்கத்தை பாஜகவினர் ஏற்றுக்கொண்டார்கள். தவறான புரிதலை ஏற்படுத்தும் அந்த காட்சிகளை நீக்க வேண்டுமானால் அதற்கும் தயார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க