• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெக்டோனல்ட் உணவு விடுதியில் தரப்பட்ட காபியில் கரப்பான் பூச்சியின் கால்கள்

October 20, 2017 தண்டோரா குழு

பாங்காக்கில் உள்ள மெக்டோனல்ட் உணவு விடுதியில் தரப்பட்ட காபியில், கரப்பான்பூச்சியின் கால்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாங்காக் நகரில் மெக்டோனல்ட் உணவு விடுதிக்கு வாடிக்கையாளர் ஒருவர் வியாழக்கிழமை (அக்டோபர் 19) இரவு காபி அருந்த சென்றார். அவருக்கு வழங்கப்பட்ட காபியில் கரப்பான்பூச்சியின் கால்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து,அ அவர் காப்பி இயந்திரத்தில் இருந்து காபியை கோப்பைக்குள் ஊற்றுவதற்கு முன்பே அதில், கரப்பான் பூச்சியின் கால்கள் இருந்திருக்க கூடும். அதை கவனிக்காத அந்த ஊழியர் காபியை ஊற்றியிருக்க கூடும் என்று கூறி தனக்கு மற்றொரு காபியை கேட்டுள்ளார்.

ஆனால், அந்த ஊழியர் காபி இயந்திரத்தில் இருந்து வேறு ஒரு கோப்பையில் காபியை ஊற்றியபோது, அதிலும் கரப்பான்பூச்சியின் கால்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே அந்த காப்பி இயந்திரத்தை சரிபார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, மெக்டோனல்ட் நிறுவனம், அந்த வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்நிலையில்,தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை குறித்து இணையதளமான பேஸ்புக்கில் நாச்டளிசிக் ஏய்க் என்ற பெயரில் பதிவிட்டார் அந்த நபர். அவருடைய பதிவிற்கு 1,700 லைக்ஸ் மற்றும் 14,000 பேருடைய எதிர்வினைகளும் அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க