• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூலப்பொருள் விலையேற்றத்தால் கடும் நெருக்கடியில் குறுந்தொழில் நிறுவனங்கள்

November 20, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் கோவை மாவட்ட ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில், 2022-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக ஜேம்ஸ், பொதுச்செயலாளராக பிரதாப்சேகர், பொருளாளராக லீலா கிருஷ்ணன் உட்பட 71 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மூலப் பொருள்களின் விலையேற்றத்தால் குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடும் நெருக்கடியில் உள்ள தொழில்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு ரூ.2 லட்சம், மாநில அரசு ரூ.1 லட்சம் 50 சதவீதம் மானியத்துடன் வட்டியில்லா கடனாக வழங்க வேண்டும்.

குறு, சிறு தொழில் முனைவோர் நலன் கருதி தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். வாரியத்தில் குறு, சிறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளைப் பங்கேற்க செய்ய வேண்டும். தமிழக முதல்வர் குறு, சிறு தொழில் முனைவோர்கள் சங்க நிர்வாகிகளை சந்திக்க வாய்ப்பு அளித்து, நேரடியாக பிரச்சினைகளை கேட்டு அறிந்து உதவிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் மூலப் பொருட்களின் விலை உயர்வு கண்டித்து நடத்த உள்ள போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும். கோவையில் அரசுக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்து, மாவட்டங்களில் அதிக அளவில் குறுந்தொழில்பேட்டைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க