• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

December 12, 2022 தண்டோரா குழு

மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் அச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜாகீர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.”அனலாக் நிலுவைத் தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட் அப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை நிறுத்த வேண்டும், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்” ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய சங்கத்தினர்,

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்து வருவதாக தெரிவித்தார். 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனலாக் சிக்னல் காலாவதி ஆகிவிட்டதாகவும் இருப்பினும் நிலுவைத்தொகை என கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் விலையில்லா செட்டாப் பாக்ஸ் என கூறி வழங்கிவிட்டு செயல்படாத செட்டாப் பாக்ஸுகளுக்கு முழுத் தொகையையும் ஆப்பரேட்டர்களிடமிருந்து வசூல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழக முதல்வர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் தங்களுக்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையின் மூலம் இடையூறு ஏற்படுவதாக தெரிவித்த அவர்கள் தங்களது மனுவை உடனடியாக பரிசீலனை செய்து உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க