• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை

September 6, 2017 தண்டோரா குழு

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெங்களூருர் ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் முன் வந்த மர்ம நபர்கள் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.இதுக்குறித்து பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கவுரி லங்கேஷ், ‘லங்கேஷ் பத்திரிகே’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரையும் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரி பல்வேறு பத்திரிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க