• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூட்டைபூச்சியால் வீடு எரிந்து நாசம்!

July 29, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் படுக்கை அறையில் இருந்த மூட்டை பூச்சிகளை அழிப்பதற்காக தீ வைத்தபோது, எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரிலுள்ள டோபேகா என்னும் இடத்தில் அவுஸ்டா ஸ்காட் என்பவர் தனது தாய் மோனிக் மற்றும் தனது 2 மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.அவர் இரவு படுக்க சென்ற போது ,தனது படுக்கை அறையில் மூட்டைப்பூச்சி இருப்பதை பார்த்துள்ளார். உடனே அதை சிகரெட் லைட்டரை பயன்படுத்தி கொன்றுள்ளார். இதனையடுத்து மெத்தையில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதை பார்த்துள்ளார். மீண்டும் சிகரட் லைட்டரை பயன்படுத்தி அவற்றை அழிக்க முயன்றபோது, பஞ்சு மெத்தையில் தீ விழுந்து, அந்த அறை முழுவதும் தீ பற்றியுள்ளது.

முதலில் தீயை அனைக்க முயன்றுள்ளார், ஆனால் தீ வேகமாக பரவ தொடங்கியதும் தனது தாயார் மற்றும் குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளிய வந்துள்ளார். அருகில் இருந்தவர்களுக்கு தீ விபத்து குறித்து தகவல் தந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அந்த குடியிருப்பு வாசிகள், வீட்டைவிட்டு வெளியேறி சாலைக்கு வந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து டோபேகா தீயணைப்பு வீரர்களுக்கு தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீயை அணைத்துள்ளனர். தீயின் புகையால் பாதிக்கப்பட்ட 13 பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகளை அருகிலுள்ள மருத்துவமனனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த குடியிருப்பில் சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் 140,000 டாலர் இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க