• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பையில் கரன்ஜ் நீர் மூழ்கிக்கப்பல் அறிமுகம்

January 31, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3வது நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3வது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். கரன்ஜ் இன்று மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த கரஞ்ச் நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.

மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் 6 ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. டீசல்-எலக்ட்ரிக் மூலம் இயங்கும் இந்த கப்பல்கள் நீருக்கு அடியில் இருந்தும், நீர்ப்பரப்பில் இருந்தும் போர்க்கருவிகளை பயன்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியின் போது கடற்படை தளபதி சுனில் லன்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

மேலும் படிக்க