• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்தால் புதிய சட்டம் கொண்டுவர தயார் : மத்திய அரசு

May 15, 2017 தண்டோரா குழு

முத்தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்தால் புதிய சட்டம் கொண்டுவர தயாராக இருப்பதாக மத்திய மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் முத்தலாக் குறித்த வழக்குஉச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், இன்றைய விசாரணையில், தலாக் நடைமுறை இஸ்லாமின் ஒரு அங்கமாக இருந்தால் அதனை தாங்கள் ரத்து செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு மட்டுமல்ல.

சிறுபான்மையினருக்கும் பாதுகாவலாக திகழ்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.அப்போது, இது குறித்து வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, திருமணம் மற்றும் திருமண முறிவு என்பது மதம் சார்ந்த விஷயமல்ல எனவும் இஸ்லாம் மதத்தில் தலாக் கூறி மண முறிவு பெறும் வசதி ஆண்களுக்கு மட்டுமே உள்ளது, பெண்களுக்கு இல்லை எனவும் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டால் திருமணமான ஒரு இஸ்லாமியர் தனது மனைவியிடம் இருந்து மணவிலக்கு பெற சட்டப்படி மாற்று என்ன? என்ற கேட்டனர்.

இதற்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி, முத்தலாக் முறையை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தால் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து தொடர்பாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க