• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முத்தண்ணன் குளத்திற்கு அருகேயுள்ள 992 வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்

June 6, 2020 தண்டோரா குழு

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்திற்கு அருகே உள்ள வீடுகளை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முத்தண்ணன் குளத்தை சுற்றி 1500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல்வேறு சுற்றுலா தொடர்பான பணிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இடம்பெயர டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து டோக்கன் பெற்ற 992 பேர்களின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் வீடுகளை காலி செய்யாத ஒரு சிலர் வீடுகளை காலி செய்து வருகின்றனர். இடிந்து விழும் நிலையிலுள்ள வீடுகளும் இடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டோக்கன் வழங்கப்படாத வீடுகள் இடிக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து இப்பணிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க