• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல் முறையாக ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு

April 20, 2018 தண்டோரா குழு

முதல் முறையாக இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது.இதனையடுத்து 32 மாவட்டங்களில் 44 பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சென்னைக்கு வந்து கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் தங்களுடைய வீடுகளில் இருந்தோ அல்லது அந்தந்த மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு சென்றோ விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுக்கலாம்.

மேலும்,கலந்தாய்வின் ஒவ்வொரு கட்டமும்,குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மாணவர்களுக்கு அனுப்பப்படும்.அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு தேதி அடுத்த வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க