September 5, 2019 தண்டோரா குழு
‘முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயார்’ என திமுக மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமணவிழா திருப்பூரில் இன்று நடந்தது. இவ்விழாவில் விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய முக.ஸ்டாலின்,
பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்து கொண்டுள்ளோம்.பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்தனர். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்தது. முதலீட்டாளர்கள் தமிழகம் வந்தால் திமுகவுக்கு மகிழ்ச்சிதான்.
கூறிய படி மொத்த முதலீடுகளையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தால் முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயார் என ஸ்டாலின் பேசினார்.