• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

July 26, 2017 தண்டோரா குழு

பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஊழல் புகாரில் சிக்கிய பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி விவகாரத்தில் ஒரு மித்த கருத்து எட்டாததால் முதல்வர் நிதிஷ் இன்று (ஜூலை 26) மாலை கவர்னர் கேசவ்நாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில், நிதிஷ்குமார் ராஜினாமா செய்த சில மணித்துளிகளில், பிரதமர் நரேந்திரமோடி, அவரது முடிவை வரவேற்று, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஊழல், முறைகேடுகளுக்கு துணை போகாது, தீரத்துடன் முடிவெடுத்த நிதிஷ்குமாரின் நேர்மையை 125 கோடி இந்திய மக்களும் போற்றுவார்கள் என்றும் நாட்டின் ஊழலுக்கு எதிரான போரில் அரசியல் மாச்சரியங்களை கடந்து, நிதிஷ்குமார் பங்கேற்றிருப்பதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க