• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் நிவாரண நிதிக்கு லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ. 2 கோடி நிதி

April 23, 2020 தண்டோரா குழு

முதல்வர் நிவாரண நிதிக்கு லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.2 கோடி நிதி

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (LMW) ரூ. 2 கோடி கொரோனாவை எதிர்த்து போராட நிதியளித்தது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா தொற்றை எதிர்த்து போராட தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு ரூ.2 கோடி நிதி அளித்தார். இதற்கான காசோலையை தமிழ்நாடு உள்ளாட்சி, ஊரக மேம்பாடு மற்றும் சிறப்பு அமலக்க திட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம்,கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

மேலும் படிக்க