• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு – அதிமுக நிர்வாகி கைது

September 7, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டகோவை மாவட்ட அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தலைவராக இருந்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் சுப்பிரமணியம் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட நான்கு பிரிவுகளில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.அதிமுக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க