September 19, 2019 தண்டோரா குழு
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சி ஆக்கப்பணிகள், கட்சி சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பொதுக்குழு கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.