• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதலையுடன் செல்பி பிரான்ஸ் பெண் காயம்

January 3, 2017 தண்டோரா குழு

தாய்லாந்து தேசிய பூங்காவில் முதலையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பெண் முதலை கடித்ததில் படுகாயமடைந்தார்.

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் க்யோ யாய் தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாங்காக் நகரை சுற்றிப் பார்க்க வரும்போது அந்த பூங்காவைப் பார்க்காமல் செல்வதில்லை. அவ்வாறு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி அங்கு வந்த போது புத்தாண்டு தினத்தன்று இச்சம்பவம் நேர்ந்துள்ளது.

இது குறித்து தேசிய வனவிலங்கு பூங்காவின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 2) கூறியதாவது:

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 41 வயது பெனெடுலியே லெஸெஃப்லி என்ற பெண் தனது கணவருடன் தேசிய வனவிலங்கு பூங்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முதலை தண்ணீரில் இருந்து வெளியே வந்து கரையில் படுத்திருந்ததைக் கண்டார். அதனுடன் செல்ஃபி எடுக்க விரும்பினார். செல்ஃபி எடுத்ததும் அந்தப் படத்தைக் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினார்.

அந்த முதலையின் அருகில் சென்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அது திடீரென்று அவருடைய காலைக் கடித்துவிட்டது. 1௦ அங்குல நீளம், 2 அங்குல ஆழத்துக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதைப் பார்த்த அவருடைய கணவர் அதிர்ச்சி அடைந்து, அப்பூங்காவின் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அத்தகவலை கேட்ட அவர்கள் உடனே லெஸெஃப்லியை மீட்டு, முதலுதவி அளித்துள்ளனர். பிறகு அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கு முன் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை.சம்பவம் நடந்த இடத்தில் முதலைகளின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதை அலட்சியப்படுத்தி, செல்ஃபி மோகத்தால் அந்தப் பெண்ணுக்கு இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க