• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முகமது நபி குறித்து அவதூறு பேச்சு – பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் கைது

February 1, 2021 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறு பேசியதால் பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனை போலீசார் கைது செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கல்யாணராமன் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்வில் இஸ்லாமியர்களின் இறைதூதர் நபியை இழிவு படுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கல்யாண ராமனுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் நேற்று இரவு சுமார் 9 மணிக்கு மேல் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமுமுகவினர் உக்கடம் பகுதியில் சாலை மறியலிலும், பி.எஃப்.ஐ., யினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், முகமது நபி குறித்து அவதூறு பேசியதால் பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது மீது மதங்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதல் ஏற்படுத்த முயற்சித்தல், தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

மேலும் படிக்க