March 18, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் டவுன்ஹால் பெரிய கடை வீதி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் முகக்கவசம் அணியாமல் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பேருந்து நிறுத்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது நகர் நல அலுவலர் ராஜா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.