• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீரா குமார் நாளை வேட்புமனு தாக்கல்

June 27, 2017 தண்டோரா குழு

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீரா குமார், நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் அவர் அளித்த பேட்டியில்,

“எதிர்க்கட்சிகள் என்னை ஒருமனாக தேர்வு செய்துள்ளதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஜனநாயக மதிப்புகள், வெளிப்படைத் தன்மை, வறுமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட அரசியல் கோட்பாடுகளை முன் வைத்தே தேர்தலை சந்திக்கிறோம்.இரண்டு தலித் வேட்பாளர்களுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதாக பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் பொதுவான கொள்கை அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளன. அனைத்து கட்சிகளும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

நான் லோக்சபா சபாநாயகராக இருந்த போது, எனது பணியை அனைவரும் பாராட்டியுள்ளனர். ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக யாரும் புகார் கூறவில்லை.ஜனாதிபதி தேர்தலை தலித்களுக்கு இடையிலான மோதலாக மாற்ற வேண்டாம்.

மேலும் குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க