February 21, 2018
தண்டோரா குழு
மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
இதனையடுத்து ராமேஸ்வரத்தில் நடிகர் கமல்ஹாசனை மீனவ பிரதிநிதிகள் சந்தித்தனர்.பின்னர் மீனவர்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு, நிறைவேற்றாதபோது கேள்வி கேட்டால் அதை திசை திருப்புவது வாடிக்கையாகிவிட்டது. மீனவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது எங்கள் கடமை என்றும், மீனவ பிரச்னைகளை தீர்க்கும் வாய்ப்பை தனக்கு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,கட்சிக்கு ஆள் சேர்க்க வரவில்லை, அவர்களோடு சேரவே நான் வந்துள்ளேன் என்றார்.