• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு திரும்பினார் சசிகலா

March 31, 2018 தண்டோரா குழு

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் வெளிவந்த சசிகலா, இன்று மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டார்.

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் கடந்த 20ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.இதையொட்டி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா தஞ்சையில் தமது கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சசிகலா, அதன்பின் தஞ்சை, உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டார்.

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பரோல் முடிவதற்கு, மூன்று நாட்களுக்கு முன்பே சசிகலா சிறைக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க