• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் ஒருமுறை இந்தியா வென்றது – மோடி டுவீட் !

May 23, 2019 தண்டோரா குழு

மீண்டும் ஒருமுறை இந்தியா வென்றது என பிரதமர் நரேந்திர மோடி டுவீட் செய்துள்ளார்.

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 343 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 92 இடங்களில் முன்னிலை. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி டுவீட் செய்துள்ளார்.

அதில், மீண்டும் ஒருமுறை இந்தியா வென்றது. அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை சேர்ந்து உருவாக்குவோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க