• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் – மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

December 22, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பில் மின் மோட்டாரை பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி அணை, பில்லூர் குடிநீர் திட்டம் போன்றவை மூலம் தண்ணீர் பெறப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.கோவை மாநகர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தீவிர நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக விதிமீறி குடிநீர் எடுக்கப்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குடிநீர் குழாயில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்களை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

“கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் குடிநீர் இணைப்பில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது சட்ட விரோத செயல் ஆகும். மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வின் போது, குடிநீர் இணைப்பில் சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது தெரியவந்தால்,நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்,” என்றனர்.

மேலும் படிக்க