• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கக்கோரி மத்திய அமைச்சரை சந்தித்த நடிகை வரலட்சுமி

June 13, 2017 தண்டோரா குழு

டெல்லியில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சௌத்ரியுடன், நடிகை வரலட்சுமி இன்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

நடிகை வரலட்சுமி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நடிகை வரலட்சுமி ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மகிளா நீதிமன்றங்கள் அதிகளவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசினார்.

இந்நிலையில், இன்று நடிகை வரலட்சுமி டெல்லியில் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரியை சந்தித்து மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கக்கோரியும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க கூடுதலாக நீதிபதிகளை நியமிக்கவும் அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார்.

அப்போது மகளிர் நீதிமன்றம் அமைப்பது குறித்து பிற மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுத உள்ளதாக இணையமைச்சர் சௌத்ரி உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க