May 22, 2019 தண்டோரா குழு
மார்டின் நிறுவன ஊழியர் பழனிச்சாமி உயிரிழந்த விவகாரத்தில் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் விசாரணை துவக்கினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்துனர். இதற்கிடையில், அந்நிறுவனத்தில் காசாளராக பணியாற்றிய பழனிச்சாமி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, பழனிசாமி மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி , பழனிச்சாமி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கோவை 8 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் இன்று விசாரணையை துவக்கினார்.
கோவை அரசு மருத்துவமனையில் பழனிச்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்