• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகத்தில் நுழைவதற்கு தடை

March 20, 2020

கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸின் எதிரொலியாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேச மாநிலங்களின் எல்லைகள் நாளை முதல் 31ஆம் தேதி வரை மூடப்படுகிறது.

கீழ் கண்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்

•அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள்,ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.

•இதர சரக்கு வாகனங்கள்

•தவிர்க்க இயலாத காரணங்களாக இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள்

பொது மக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் பேருந்துகள் எனினும் இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்களும் நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் நாட்டின் நலன்கருதி பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க