• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“மாரிதாஸ் வாழ்க”என்றும் கைகளில் “DMK ஒழிக” என்றும் எழுதி வந்தவரால் கோவையில் பரபரப்பு

December 13, 2021 தண்டோரா குழு

மாரிதாஸ் கைதை கண்டித்து நெற்றியில் “மாரிதாஸ் வாழ்க” என்றும் கைகளில் “DMK ஒழிக” என்றும் எழுதி வந்தவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்ப்பட்டது.

மாரிதாஸ் என்ற யூடியூபர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சர்ச்சையை கிளப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவு செய்ததாகவும் கூறி மதுரை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அந்த கைது சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கும் மாரிதாஸ் கைதிற்கு க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் அவரது நெற்றியில் “மாரிதாஸ் வாழ்க” என்றும் கைகளில் “ஃபாரின் மதநெறி DMK சிற்றரசு ஒழிக” என்றும் எழுதி வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரை காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அவர் தான் எந்த கட்சியை சேர்ந்தவர் இல்லை என்றும் இந்தியன் என்ற உணர்விலும் தான் வந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க