• Download mobile app
12 May 2024, SundayEdition - 3014
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாயாவதி, அகிலேஷ், மம்தா மற்றும் தமிழகத்தில் ஸ்டாலின் ஆகியோரால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் – கெஜ்ரிவால்

February 4, 2019 தண்டோரா குழு

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பாஜகவை தோற்க்கடிக்க, மாயாவதி, அகிலேஷ், மம்தா மற்றும் தமிழகத்தில் ஸ்டாலின் ஆகியோரால் மட்டுமே முடியும் என தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் முர்ஷிதாபாத்தில் அரசு திட்டங்களை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

உத்திரபிரதேசத்தில் மாயாவதி மற்றும் அகிலேஷ், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா மற்றும் தமிழகத்தில் ஸ்டாலின் ஆகியோரால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். இதுபோல், டெல்லியில் அக்கட்சியை ஆம் ஆத்மி தோல்வியுறச் செய்யும் மேலும் வரும் 2019 மக்களவை தேர்தலில் பாஜக வென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி நாட்டை அழித்து விடுவார்கள் எனவும் கேஜ்ரிவால் எச்சரித்தார். டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி பாஜகவை தோற்கடிக்கும்” என அவர் தனது நம்பிக்கையை தெரிவித்தார்.

மேலும் படிக்க