• Download mobile app
26 Jun 2026, FridayEdition - 3789
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மான்கறி பதுக்கிய நபருக்கு ஜாமீன் வழங்க நூதன தண்டனை

March 17, 2017 தண்டோரா குழு

கோவையில் மான் கறி பதுக்கிய நபருக்கு ஜாமீன் வழங்க வன விலங்குகளுக்கு ஒரு மாதம் தண்ணீர் ஊற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த மாதம் வீட்டில் மான் கறி வைத்திருந்ததாக சிறுமுகை வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். செல்வராஜின் வழக்கறிஞர் சிவகுமார் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஒரு மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையை நீதிபதி சுரேஷ்குமார் நடத்தினார்.

அப்போது, செல்வராஜ் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

“எனினும், குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜ் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக வனப் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் வன விலங்குகளின் தாகம் போக்கும் வகையில், ஒரு மாதத்திற்கு மேட்டுப்பாளையம் வன பகுதியில் அமைக்கப்பட்ட நீர் தொட்டிகளில் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு மாதம் கழித்து இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வன அதிகாரியிடம் சான்றிதழ் பெற வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க