• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் – மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் அறிவிப்பு

May 29, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர் திட்டம்-2ல் வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலை குடிநீர் தொட்டி வரை உள்ள குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் முத்துக்கல்லூர் என்ற இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணி நாளை (செவ்வாய்) நடைபெற உள்ளது.

எனவே, அன்றையதினம், பில்லூர் திட்டம்-2ன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் சிங்காநல்லூர்,ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரிபாளையம், கணபதி, காந்திபுரம், புலியகுளம்,ரத்தினபுரி, சித்தாபுதூர் மற்றும் உக்கடம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே,பொதுமக்கள், சிரமத்தினை பொருத்துக்கொண்டு, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க