• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி பணியாளர்களுடன் மாநகர காவல் துறையினர் இணைந்து மாஸ் கிளினிங்

November 26, 2022 தண்டோரா குழு

மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து மாஸ் கிளினிங் தூய்மை பணிகளை மேற்கொண்ட மாநகர காவல்துறையினரின் செயல் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் மற்றும் கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர், ஆர் எஸ் புரம் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து உக்கடம் புல்லுகாடு ஹவுசிங் யுனிட் பகுதியில் மாஸ் கிளினிங் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

மாநகர காவல்துறை மாநகராட்சி பணியாளர் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யுனிட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதையும் தூய்மை செய்தனர். அப்பகுதியில் கிடந்த குப்பைகள் தேவையின்றி வளர்ந்திருந்த களை செடிகளை அப்புறப்படுத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டு அப்பகுதியையே மாஸ் கிளினிங் செய்தனர்.

தூய்மை பணி என்பது அனைவருக்கும் பொதுவானது எனவும் பொதுமக்களும் அவர்களது பங்களிப்பை வழங்கலாம் நம் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறான முயற்சியை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து காவல்துறையினர் மேற்கொண்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க