• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் – 36 மனுக்கள் குவிந்தன

May 16, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது.மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில், பிறப்பு, இறப்பு சான்றிதழ், தார்சாலை வசதி, மின்விளக்கு, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கிழக்கு மண்டலத்தில் 5 மனு, மேற்கு மண்டலத்தில் 5 மனு, வடக்கு மண்டலத்தில் 5 மனு, தெற்கு மண்டலத்தில் 2 மனு, மத்திய மண்டலத்தில் 13 மனு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 6 மனு என மொத்தம் 36 மனுக்கள் மேயரிடம் குவிந்தன. மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், இம்மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க