• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சியில் 9 உதவி செயற்பொறியாளர்கள் இடமாற்றம்

August 26, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 9 உதவி செயற்பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த சரவணக்குமார், பிரதான அலுவலக பொறியியல் மற்றும் குடிநீர் பிரிவுக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், மத்திய மண்டல உதவி செயற்பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய மண்டல உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, தெற்கு மண்டல உதவி செயற்பொறியாளராகவும், தெற்கு மண்டலத்தில் பணிபுரிந்து வந்த சுந்தர்ராஜ், கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளராகவும், மத்திய மண்டல உதவி செயற்பொறியாளர்( திட்டம்) ஹேமலதா, மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல்,வடக்கு மண்டல உதவி செயற்பொறியாளர்(திட்டம்) தெற்கு மண்டலத்திற்கும்,பிரதான அலுவலக பொறியியல் பிரிவு உதவி செயற்பொறியாளர் கலாவதி, மேற்கு மண்டலம் உதவி செயற்பொறியாளராகவும்( திட்டம்), கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் பாபு, மத்திய மண்டல உதவி செயற்பொறியாளராகவும்( திட்டம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் (பணிகள்) செந்தில் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்( திட்டம்) பணிகளை கூடுதலாக மேற்கொள்வார். உதவி செயற்பொறியாளர் கலாவதி, பில்லூர் 3 ஆவது திட்டம், நிலம் கையகப்படுத்தும் பணியினை கூடுதலாக கவனிப்பார்.உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், வெள்ளலூர் உரக்கிடங்கு திட்டப் பொறியாளர் பணியினை கூடுதலாக கவனிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க