• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

June 15, 2017 தண்டோரா குழு

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இறைச்சிக்காக மாடுகள் வாங்கவும், விற்கவும் சில கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தன. மாட்டிறைச்சிக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, ஐதராபாத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், இரண்டு வார] காலத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் படிக்க