• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தி.மு.க ஆர்பாட்டம்

May 31, 2017 தண்டோரா குழு

மாட்டிறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திமுக சார்பில்,அதன் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது,

இது திமுக.,வின் போராட்டம் மட்டும் அல்ல. தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சிகள் சார்பிலும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.மாட்டிறைச்சி விற்க தடை விதித்து 8 நாட்கள் ஆகின்றன. இந்த தடை உத்தரவிற்கு பிற மாநில முதல்வர்கள் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் தடை உத்தரவை முழுமையாக படித்து பார்த்து விட்டு கருத்துக் கூறுவதாக சொல்லியிருப்பது கண்டத்திற்குரியது. இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் மெரினா புரட்சி போன்று மற்றொரு புரட்சி உருவாகும்.

ஏற்கனவே தமிழக விவசாயிகள் வறட்சிபாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சமயத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் பா.ஜ., அரசு இந்த தடையை கொண்டு வந்துள்ளது.

இது போன்ற தடைகளால் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறது. மாட்டிறைச்சி தடை சட்டத்தை கொண்டு வரும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு என கூறிய மத்திய அரசு, தற்போது அரசிய சட்டம் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.

மோடி விரும்புவதை தான் நாம் சாப்பிட வேண்டும் என்றால் தனிமனித உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. சுதந்திர நாட்டில் வாழ்வதாக கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது போன்ற தடைகளால் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறது.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மேலும் படிக்க