• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மல்யுத்தப் போட்டியில் 14 வயது சிறுமி மரணம்

January 6, 2017 தண்டோரா குழு

தூத்துக்குடியில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற 14 வயது சிறுமி எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து, மரணம் அடைந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மாதவன் நகரைச் சேர்ந்த கென்னடி என்பவரின் மகள் மாரீஸ்வரி (14). சோரீஸ்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்புப் படித்து வந்தார். இவர் மல்யுத்தத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தூத்துக்குடி மாவட்ட அளவிலான மல்யுத்தப் போட்டி வெள்ளியன்று நடைபெற்றது. இதில், குத்துச் சண்டை களத்துக்கு காலையில் வந்த மாரீஸ்வரி முதல் சுற்றில் பங்கேற்று விட்டுத இரண்டாவது சுற்றில் விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தார்.

பின்னர், மதிய உணவு இடைவெளியின்போது திடீரென மாரீஸ்வரி மயக்கமடைந்து மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடன் இருந்த அனைவரும் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

இதனையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மல்யுத்தப் போட்டிகளில் எதிர்காலத்தில் இன்னும் நிறைய சாதிப்பதற்கு கனவு கண்ட மல்யுத்த வீராங்கனையின் திடீர் மரணம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க